இன்னும் சொல்ல நினைப்பவை
Friday, September 9, 2011
பசி
என்னுடைய வண்ணத்துப்பூச்சி
தகிக்கும் தார்சாலையின்
நடுவில் கிடந்தது........
எதையுமே இழக்காமல்
உயிரை மட்டும்
இழந்திருந்தது.......
வண்ணத்துப்பூச்சிகள்
குழந்தைகளுக்கு தம் சிறகுகளைத்தந்து
தேவதைகள் செய்வன
சில போது
கவிதைகள் தம்மை
அழகுபடுத்திக்கொள்ள
வண்ணத்துப்பூச்சியை நாடும்.....!
இறந்த பின்னும்
எண்ணற்ற கவிதைகள்
படைத்தது இதன்
வரலாறு..........?
இன்று தகிக்கும் தார்சாலையில்
.......
.......
மனசு கிடந்து துடித்தாலும்
இறுதி வெற்றி
வயிற்றுக்கே....
ஒருவேளை இதை
அதே வண்ணத்துப்பூச்சி
படிக்க நேர்ந்தால்
உண்மையிலேயே
எதையுமே இழக்காமல் .......?
Friday, September 2, 2011
அன்புள்ள தோழி
நீ உன்
கனவுகளோடே சுகித்திரு.....
உன் உலகத்தைவிட்டு
உன்னை பிடுங்கியெடுக்கவோ?
உன் சிறகுகளை முறித்தெறியவோ...?
எனக்கு உரிமை இல்லைதான்
ஆனால்....
நான் நினைவுகளுக்கும்
காலத்துக்கும் அப்பாற்பட்டவன்
ஏன்
உன் கனவுகளுக்கும் கூட.......
உன் சிலுவைகள் உன்னோடேயிருக்கட்டும்
என்
கைகாட்டி மரம்
வேறு திசை நோக்கி......
கனவுகளோடே சுகித்திரு.....
உன் உலகத்தைவிட்டு
உன்னை பிடுங்கியெடுக்கவோ?
உன் சிறகுகளை முறித்தெறியவோ...?
எனக்கு உரிமை இல்லைதான்
ஆனால்....
நான் நினைவுகளுக்கும்
காலத்துக்கும் அப்பாற்பட்டவன்
ஏன்
உன் கனவுகளுக்கும் கூட.......
உன் சிலுவைகள் உன்னோடேயிருக்கட்டும்
என்
கைகாட்டி மரம்
வேறு திசை நோக்கி......
Thursday, September 2, 2010
ஒரு நாவல் மரம்
நான்
இலைகள் தெரியாத அளவுக்கு பழுத்த
கருநிற கணிகள் சொப்பியிருக்கும்
நாவல்மரத்தடியில் என் கைகளிரண்டையும்
அகலத்திறந்தவாறு இருந்தேன்
என் கைகளில் நாவல்பழங்கள் விழும் என்று!
ஏன் சிரிக்கிறீர்?
உமது வேண்டுகோள்களுக்கான செவிகள் காற்றிலிருப்பதும்
உங்கள் நேர்த்திக்கடன்கள் சென்றடைவதும் நடைபெறும்போது
என் கைகளிலும் பழங்கள் விழும்!!
இலைகள் தெரியாத அளவுக்கு பழுத்த
கருநிற கணிகள் சொப்பியிருக்கும்
நாவல்மரத்தடியில் என் கைகளிரண்டையும்
அகலத்திறந்தவாறு இருந்தேன்
என் கைகளில் நாவல்பழங்கள் விழும் என்று!
ஏன் சிரிக்கிறீர்?
உமது வேண்டுகோள்களுக்கான செவிகள் காற்றிலிருப்பதும்
உங்கள் நேர்த்திக்கடன்கள் சென்றடைவதும் நடைபெறும்போது
என் கைகளிலும் பழங்கள் விழும்!!
Saturday, May 2, 2009
இறுதியில் வெற்றி மக்களுக்கே!
மக்களை அதிக நாட்களுக்கு ஏமாற்ற முடியாது அவர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாலும் மிகச்சரியாக செயல்படுவார்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிருபிக்கப்பட்டிருக்கிறது!
தமிழக அரசு எந்த விதமான அறிவிப்பும் இன்றி மாநகராட்சிகளில் “தாள் தள சொகுசுப்பேருந்து“ என்ற பெயராலே கூடுதல் கட்டணம் வசூலிக்கத் துவங்கியது சட்டப்பேரவையில் எதிர் கட்சிகளுக்கு இது பற்றி கேள்வியெழுப்பகூட அனுமதி மறுக்கப்பட்டது.
நாட்கள் சென்றன. அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் தங்கள் எதிர்ப்பையும் மிக மிக அமைதியாகவே காண்பிக்கத்துவங்கினர். அந்தப் பேருந்துகள் வரும்போது மிக மிக அழகாகவும் அமைதியாகவும் விலகி வழிவிட்டனர்.
இன்று அந்த பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்படவே விழி பிதுங்கிய அதிகாரிகளும், அரசும், வேறு வழியே இல்லாமல் பேருந்துக்கட்டணத்தைக் குறைத்திருக்கிறார்கள்.
இபோதும் கூட மாண்புமிகு மதலமைச்சர் அவர்களும், போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களும், நாங்கள் பேருந்துக்கட்டணத்தை ஏற்றவும் இல்லை இறக்கவும் இல்லை என்று அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் உண்மை என்ன என்பது மக்களுக்குத்தெரியும்.
சற்றுமுன் வந்த செய்தி முதலமைச்சர் உடல்நலக்குறைவால் அப்பலோ மருத்துவமனையில், இது உண்மையான செய்தியாய் உண்மையிலேயே இருந்தாலும் அவருக்கு எந்தவிதமான அனுதாபத்தையும் இது தராது. இதுவும் ஒரு நாடகமோ என்றே தோன்றும்.
மக்கள் மந்தையாடுகள் அல்ல அவர்களுக்கு தீவிரமாகவும் செயல்படத்தெரியும் என்பதற்கு இதோ கோவையில் ராணுவம் மீது நடந்த தாக்குதல் இன்னும் ஒரு உதாரணம்.
காவல்துறையிடம் பயப்படும் மக்களுக் ராணுவத்தின் மீது கை வைக்கிற அளவுக்கு தைரியம் அல்லது வெறுப்பு ஏன் ஏற்பபட்டது.
இதிலும் போலி அறிக்கைகள் வரும்,
இன்னல்கள் துவங்கிவிட்டன, அது மக்களுக்கா? அல்லது ஆட்சியாளர்களுக்கா?
இந்தக் கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும்.
Sunday, April 19, 2009
இன்னும் எத்தனை நாளம்மா?
மழை பெய்கிறது. ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ் மக்கள், எருமைகளைப்போல, எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள், ஈரத்திலேயே உட்கார்ந்திருக்கிறார்கள், ஈரத்திலேயே படுக்கிறார்கள், ஈரத்திலேயே சமையல் உணவு எல்லாம். உலர்ந்த தமிழன் மருந்துக்கூட அகப்படமாட்டான். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் சத்தியமான வார்த்தைகள்தானே இவை, இலங்கைத்தமிழர் லட்சக்கணக்கில் கொல்லப்படுவதைக் கண்டு மனம் நொந்து பதிமூன்றாவது நபர் தீக்குளித்து இறந்து போயிருக்கிறார். இந்திய தமிழக உடகங்கள் பக்கத்து வீட்டுக் கிழவன் இறந்ததைப்போல பெட்டி செய்திகூட போடாதது மிகுந்த மனவேதனையளிக்கிறது. எங்கோ ஒரு சீக்கியனின் குடுமி முடி வெட்டப்பட்டதற்காக இந்தி மக்களின் ஒட்டுமொத்தப்பிரதிநிதி இந்திய நாடாளுமன்ற மக்களவையில் பகிரங்க மன்னிப்புக் கேட்டார். ஒரு தமிழனின் உயிர் சீக்கியனின் மயிரைவிடக் கேவலமானதா? இந்த தேசத்தில் இதற்கு முன்பு எத்தனையோ போராட்டங்களில் எப்போதும் இத்தனைபேர் தீக்குளித்து மாண்டதாக வரலாறு இல்லை ஏன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போதுகூட இல்லை........... துங்கியெழுந்த ஒருவர் துதரக உறவைத்துண்டிக்க வேண்டும் என்கிறார்? இல்லையேனில் அவர்களுடன் இவர் உறவைத்துண்டித்துக்கொள்வாரா? மாற்று அணியினர் நாங்கள் நிரந்தர தீர்வு ஏற்பட ஆவன செய்வோம் என்று உறுதி கூறுகின்றனர், ஆனால் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்க்குள் இலங்கையில் மருந்துக்குக்கூட தமிழன் இருக்கமாட்டான் என்பது தான் ஜீரணிக்கமுடியாத உண்மை? நாம் இப்படியே பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தானா? |
Subscribe to:
Posts (Atom)