நான்
இலைகள் தெரியாத அளவுக்கு பழுத்த
கருநிற கணிகள் சொப்பியிருக்கும்
நாவல்மரத்தடியில் என் கைகளிரண்டையும்
அகலத்திறந்தவாறு இருந்தேன்
என் கைகளில் நாவல்பழங்கள் விழும் என்று!
ஏன் சிரிக்கிறீர்?
உமது வேண்டுகோள்களுக்கான செவிகள் காற்றிலிருப்பதும்
உங்கள் நேர்த்திக்கடன்கள் சென்றடைவதும் நடைபெறும்போது
என் கைகளிலும் பழங்கள் விழும்!!
அருமை அருமை
ReplyDeleteநிச்சயம் உங்கள் கைகளில்
பழங்கள் (கனி) விழும்
சிந்தனையும் சொல்லிய பாங்கும்
மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
தங்களின் பின்னுட்டத்திற்கு என் தாமதமான நன்றி
ReplyDelete