Powered By Blogger

Friday, September 9, 2011

பசி


என்னுடைய வண்ணத்துப்பூச்சி
தகிக்கும் தார்சாலையின்
நடுவில் கிடந்தது........

எதையுமே இழக்காமல்
உயிரை மட்டும்
இழந்திருந்தது.......

வண்ணத்துப்பூச்சிகள்
குழந்தைகளுக்கு தம் சிறகுகளைத்தந்து
தேவதைகள் செய்வன

சில போது
கவிதைகள் தம்மை
அழகுபடுத்திக்கொள்ள
வண்ணத்துப்பூச்சியை நாடும்.....!

இறந்த பின்னும்
எண்ணற்ற கவிதைகள்
படைத்தது இதன்
வரலாறு..........?

இன்று தகிக்கும் தார்சாலையில்
.......
.......
மனசு கிடந்து துடித்தாலும்
இறுதி வெற்றி
வயிற்றுக்கே....

ஒருவேளை இதை
அதே வண்ணத்துப்பூச்சி
படிக்க நேர்ந்தால்
உண்மையிலேயே
எதையுமே இழக்காமல் .......?

Friday, September 2, 2011

அன்புள்ள தோழி

நீ உன்
கனவுகளோடே சுகித்திரு.....
உன் உலகத்தைவிட்டு
உன்னை பிடுங்கியெடுக்கவோ?
உன் சிறகுகளை முறித்தெறியவோ...?
எனக்கு உரிமை இல்லைதான்
ஆனால்....
நான் நினைவுகளுக்கும்
காலத்துக்கும் அப்பாற்பட்டவன்
ஏன்
உன் கனவுகளுக்கும் கூட.......
உன் சிலுவைகள் உன்னோடேயிருக்கட்டும்
என்
கைகாட்டி மரம்
வேறு திசை நோக்கி......