என்னுடைய வண்ணத்துப்பூச்சி
தகிக்கும் தார்சாலையின்
நடுவில் கிடந்தது........
எதையுமே இழக்காமல்
உயிரை மட்டும்
இழந்திருந்தது.......
வண்ணத்துப்பூச்சிகள்
குழந்தைகளுக்கு தம் சிறகுகளைத்தந்து
தேவதைகள் செய்வன
சில போது
கவிதைகள் தம்மை
அழகுபடுத்திக்கொள்ள
வண்ணத்துப்பூச்சியை நாடும்.....!
இறந்த பின்னும்
எண்ணற்ற கவிதைகள்
படைத்தது இதன்
வரலாறு..........?
இன்று தகிக்கும் தார்சாலையில்
.......
.......
மனசு கிடந்து துடித்தாலும்
இறுதி வெற்றி
வயிற்றுக்கே....
ஒருவேளை இதை
அதே வண்ணத்துப்பூச்சி
படிக்க நேர்ந்தால்
உண்மையிலேயே
எதையுமே இழக்காமல் .......?
No comments:
Post a Comment